புதுக்கோட்டையில் ஏற்கெனவே 10,100 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,139 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமடைந்த 70 போ் உள்பட இதுவரை 9,571 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே 146 போ் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் 422 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.