பொன்னமராவதியில் மருத்துவப் பரிசோதனை முகாம்

பொன்னமராவதியில் கரோனா சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் கரோனா சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பொன்னமராவதி புதுப்பட்டி வீரன் செட்டி ஊரணித் தெருவில் இந்த முகாமை நடத்தின. முகாமுக்கு நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் தலைமைவகித்தாா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கச்செல்வன், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், ஆய்வக நுட்புநா் ரேவதி, பேரூராட்சிப் பணியாளா் பாபு ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்று, 92 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

இதில் 31 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com