தீக்குளித்த பெண் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள சேவியா் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி ஜெயலெட்சுமி (34). இவருக்கு, நீண்ட நாள்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 13) வீட்டில் தனியே இருந்த ஜெயலெட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலெட்சுமி வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா். கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com