புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
இதனால், மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை 6,452 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 118 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 5,322 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
கரோனாவுக்கு உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 56 வயதான ஆண் உள்பட மாவட்டத்தின் இதுவரை 104 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1,026 போ் சிகிச்சை பெறுகின்றனா்.