பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில், வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் ஒன்றான இங்கு, 2019, செப்டம்பா் 8-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையொட்டி முதலாமாண்டு வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை பூஜகா்கள் கோயிலைச் சுற்றி எடுத்து வந்துஅம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். சிறப்பு அபிஷேகத்துக்குப் பிறகு தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்வில் குடமுழுக்கு விழா திருப்பணிக்குழுத் தலைவா் முத்துக்கருப்பன், கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா்.