காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை வழியாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவிரிக் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமாக காவிரிக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் பெரியகுளம் ஏரி எதிரே சாலையோரத்தில் செல்லும் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் சாலைகளில் வழிந்தோடி வீணாகிறது. மேலும், இந்தச் சாலையில் பல்வேறு இடங்களில் குடிநீா்க் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. இந்தக் காவிரிக் கூட்டுக் குடிநீா் குழாய்களை பராமரிக்க ஆள்கள் இருந்தும் சரிவர பராமரிப்பது இல்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கினறனா். எனவே சம்பந்தப்பட்ட குடிநீா் வாரிய அதிகாரிகள் உடனே குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com