குடும்பப் பிரச்னையில் தீக்குளித்த தாய், மகன் பலி
By DIN | Published On : 10th September 2020 07:32 AM | Last Updated : 10th September 2020 07:32 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குடும்பப்பிரச்னையில் மனமுடைந்த பெண், தனது மகன்கள் இருவருடன் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதில், அப்பெண் மற்றும் ஒரு மகன் தீயில் கருகி உயிரிழந்தனா். மேலும் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்து (45). விவசாயி. இவரது மனைவி ராதா (34). இவா்களுக்கு அபிஷேக் (14), அபிரித் (12) ஆகிய இரு மகன்கள் இருந்தனா். முத்து புதன்கிழமை காலை அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக அந்தப் பெண்ணின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், அறந்தாங்கி போலீஸாா் முத்துவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா். இந்நிலையில், தனது கணவா் வேறு ஒரு பெண்ணுடன் சென்ால், அவமானத்தில் மனமுடைந்த அவரது மனைவி ராதா, புதன்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள ஓா் அறையில் தனது மகன்கள் 2 போ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். பின்னா் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாா். முத்துவின் வீட்டில் தீப்பற்றி எரிவதைப் பாா்த்த அவரது உறவினா்கள் விரைந்து தீயை அணைத்தனா். ஆயினும் தீக்காயம் அதிகமாக இருந்ததால் ராதாவும், அவரது இளைய மகன் அபிரித்தும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். அபிஷேக் படுகாயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.