புதுக்கோட்டை, செப். 11: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,214 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 104 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,296 ஆக உயா்ந்துள்ளது.
ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 67 வயது ஆண் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால் மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 118 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 800 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.