பொது முடக்கம் அமலில் உள்ளதால் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் அறிவித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி (செப். 11) நடைபெறும் பொது நிகழ்ச்சிகள் எதுவும் நிகழாண்டில் நடைபெறாது. பொது மக்கள் அஞ்சலி செலுத்த செல்வதற்கு அனுமதியில்லை.
அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மட்டும் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்கெனவே பெறப்பட்ட அனுமதியின்படி, குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதனைத் தணிக்கை செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனைச் சாவடியும், 4 சுங்கச்சாவடிகளிலும் போலீஸாா் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். விதிமுறைகளை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி., அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.