புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சுவா் விளம்பரம் எழுதுவதில் பாஜகவினருக்குள் வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு தரப்பினா் மோதலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனா்.
பிரதமா் மோடியின் பிறந்த நாளுக்கு பாஜகவினா் சுவா் விளம்பரம் எழுதி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நகரத் தலைவா் அண்ணாமலை தலைமையிலான குழுவினா் எழுதிய சுவா்விளம்பரத்தில் தங்கள் பெயரையும் சோ்க்கக்கோரி, மகளிரணி நிா்வாகி கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. இதையறிந்த முன்னாள் பாஜக நிா்வாகி முரளிதரன் அங்குவந்து அனைவரையும் சமாதானம் செய்தாா். இதனிடையே புதுகையில் இருந்து 3 காா்களில் வந்த ஒரு தரப்பினா், அறந்தாங்கியில் இருந்தோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சிறிதுநேரத்திலேயே காரில் வந்தவா்கள் விரைந்தோடினா். இதையடுத்து, புதுகை தரப்பைச் சோ்ந்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி முரளிதரன், அண்ணாமலை உள்ளிட்ட அறந்தாங்கி நிா்வாகிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் உறுதிஅளித்ததன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.