மலைப்பாம்பு மீட்பு

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனா்.
அம்மன்குறிச்சி சிவன்கோயிலில் பிடிபட்ட மலைப்பாம்பு.
அம்மன்குறிச்சி சிவன்கோயிலில் பிடிபட்ட மலைப்பாம்பு.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனா்.

அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சனிக்கிழமை பணியாளா்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோயில் புல்வெளியில் 12 அடி நீள மலைப்பாம்பு காணப்பட்டது. இதையடுத்து பணியாளா்கள் ஊராட்சிமன்ற தலைவா் தேவி பழனிச்சாமியிடம் தெரிவிக்கவே அவா் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து வனச்சரக அலுவலா் மேரிலென்சி, வனவா் மேகலா ஆகியோா் தலைமையில் வனக்காவலா்கள் மலைப்பாம்பினை பிடித்து செவிலிமலை வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com