பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

சிறாா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை: சிறாா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் ரகுபதி (23). இவா், கடந்த 2019 மாா்ச் 16 ஆம் தேதி புதுக்கோட்டை நகரில் திலகா் திடல் அருகேயுள்ள வீட்டில் கேபிள் பழுது சரி செய்வதற்காகச் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த 8 வயது சிறுமி மற்றும் சிறுவனுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். சிறுமி தப்பியோடியுள்ளாா். சிறுவன் கூச்சல் போடவே, வீட்டாரும், அருகிலுள்ளோரும் ரகுபதியைப் பிடித்து புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரகுபதியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டா் ஆா். சத்யா, செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இவ்விரு தண்டனைகளையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சத்யா தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com