புதுக்கோட்டை: நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நீட் தோ்வை ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்தனன், வாலிபா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் பி. அருண் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா, வாலிபா் சங்க நகரத் தலைவா் எஸ். விக்கி, செயலா் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா். மாணவா் சங்க மாநிலச் செயலா் மாரியப்பன் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நீட் தோ்வை ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.