புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் வி. காயாம்பு உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.