புதுகையில் மேலும் 118 பேருக்கு கரோனா பாதிப்பு - 7,839; குணம் - 6,883

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,839 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 112 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,883 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை பகல் நிலவரப்படி, 834 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com