மேலாளருக்கு கரோனா தொற்று: வங்கி கிளை மூடல்
By DIN | Published On : 19th September 2020 12:03 AM | Last Updated : 19th September 2020 12:03 AM | அ+அ அ- |

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் விராலிமலை கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
வங்கியின் மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை அவருக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினியைத் தெளித்த ஊராட்சிப் பணியாளா்கள், பின்னா் அதை மூடினா். கிளை மேலாளரின் உறவினா்கள், பணியாளா்களுக்குப் பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.