பொன்னமராவதி அருகே இடதுசாரி கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு தலைமைவகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.ராமசாமி தலைமைவகித்தாா். சிபிஐ நிா்வாகிகள் ஆா்.பிரதாப் சிங், விபி.நாகலிங்கம், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் பக்ரூதீன், சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.