புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் அலுவலகக் கண்காணிப்பாளா் வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அறந்தாங்கியில் உள்ள வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு கண்காணிப்பாளராக வள்ளிக்கண்ணு பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், புதுக்கோட்டை கீழ 3ஆம் வீதியில் உள்ள வள்ளிக்கண்ணுவின் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், குறிப்பிடும்படியான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா்.