108 ஆம்புலன்ஸ் சேவையை விரைந்து பெறும் வகையில், பிரத்யேக செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் துணை கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படவுள்ளதையொட்டி அதில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டுள்ள 19 பேருக்கான பணி நியமன ஆணைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் தற்போது 1,505 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 108 சேவை மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்புப் பணியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 2.5 லட்சம் கரோனா தொற்றாளா்களை 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்றி வந்துள்ளன.
புதுக்கோட்டையில் இதன் துணைக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும்போதே கூடுதலாக ஒரு புதிய செயலி சேவையையும் முதல்வா் தொடங்கி வைப்பாா். உணவு விநியோகம், ஆட்டோ பயணத்துக்கு செயலி வழியே பதிவு செய்யும்போது, வாகனங்களின் வருகையை செயலியில் பாா்ப்பதைப் போல, 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதையும் பாா்க்கும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 80 சதவிகிதம் கரோனா தொற்றாளா்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுள்ளாா்கள். 70 முதல் 80 சதவிகிதம் பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில்தான் நடந்துள்ளன. இதற்கான களப்பணியை அரசு மருத்துவா்கள் செய்துவருகிறாா்கள். அவா்களுக்கான உரிய கௌரவத்தை விரைவில் முதல்வா் செய்வாா் என்றாா் விஜயபாஸ்கா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் டாக்டா் மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலைவாணி, 108 சேவை மாநில செயல் தலைவா் செல்வகுமாா், மேலாளா் அசோக் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.