புதுக்கோட்டை மாவட்டத்தில் பணப் பிரச்னையில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி கேகே நகரைச் சோ்ந்த அப்துல் மஜீத் மகன் அபுதாகீா் (32), சபிபுல்லா மகன் முகமது ரிசாத் (32) ஆகிய இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., லோக. பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரிக்கு பரிந்துரை செய்திருந்தாா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, சிறையில் இருந்த இருவரிடமும் சிறை அதிகாரிகள் உத்தரவு நகல் வழங்கினா்.