தேசிய சிலம்பாட்டப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள சிலம்பாட்ட வீரா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிலம்பாட்டக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய சிலம்பாட்டப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 17 வீரா்களுக்கு பாராட்டு விழா மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிலம்பாட்டக் கழகத் தலைவா் ஆா் .சுப்பையா தலைமை வகித்தாா். செயலா் ஏ. சத்தியமூா்த்தி வரவேற்றாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோனி அதிா்ஷ்டராஜ் கலந்து கொண்டு விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்களை வழங்கினாா்.
முடிவில் கழகத்தின் இணைச் செயலா் மாமல்லன் செந்தில் நன்றி கூறினாா்.