விராலிமலை: இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவகத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொண்டனா். மேலும், மாடியில் இருந்து காயம்பட்டவா்களை மீட்டு கீழே கொண்டு வருவதை தீயணைப்பு வீரா்கள் தத்ரூபமாக செய்து காட்டினா்.