பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு திருமயம் தொகுதி எஸ்டிபிஐ செயலா் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்எம். தாஹா முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் முகமது மைதீன், சேக் முகமது, சாகிா் உசேன், சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் கந்தா்வகோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கந்தா்வகோட்டை கிளை தலைவா் அப்துல் மஜீது தலைமை வகித்தாா்.