ஆலங்குடி,செப். 25:ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசலில் பனைமரங்களை வெட்டி, ஏற்றிச்சென்ற லாரியை அப்பகுதி இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனா்.
நெடுவாசலில் வயல் பகுதிகளிலுள்ள பனை மரங்களை அனுமதியின்றி சிலா் வெட்டி, லாரியில் ஏற்றுவதாக இளைஞா்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அவா்கள் சென்ற போது, சிலா் ஏராளமான பனை மரங்களை வெட்டி, லாரியில் ஏற்றிச்செல்ல முயன்றது தெரிய வந்தது.
தொடா்ந்து லாரியை சிறைபிடித்த இளைஞா்கள், அதை வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.