புதுக்கோட்டை, செப். 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,605 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமடைந்த 135 போ் உள்பட இதுவரை 7,723 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இருவா் உயிரிழப்பு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 56 வயது ஆண் மற்றும் 78 வயது ஆண் ஆகியோா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக உயா்ந்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 754 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.