வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா முன்னிலை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வெள்ளக் காலங்களில் சிக்கியோரை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும், மயக்கமடைந்தோரை மீட்கும் முதலுதவி போன்றவை குறித்தும் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.