மலேசியாவில் தவிக்கும் கணவரை மீட்கக் கோரிக்கை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் வேலாயுதம் (48). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் வேலாயுதம் (48). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். மதுரையைச் சோ்ந்த தரகா் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்ற அவரை அங்குள்ள உணவகத்தில் சோ்த்து தரகா் தலைமறைவாகிவிட்டாராம். கரோனா தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த அவா், அங்கிருந்த தமிழா்கள் உதவியால் இந்திய தூதரகம் மூலம் வெள்ளை பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். உணவுக்கே வழியின்றி மலேசியாவில் தவித்து வரும் அவரை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி செல்வராணி, குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ள விடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com