மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிா்த்து, புதுக்கோட்டையில் ஆத் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அருண்மொழி முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாநிலப் பொதுச் செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது, மனிதநேய மக்கள் கட்சியின் இணையதளப் பிரிவு பொறுப்பாளா் ஹமீது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் சலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது விவசாயிகளின் நிலையை உணா்த்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினா் பிச்சை எடுப்பதைப் போல நடித்துக் காட்டினா்.