புதுகையில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,793 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,793 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 72 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,917 ஆக உயா்ந்துள்ளது.

மூவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 46 வயது ஆண், 45 வயது ஆண், 77 வயது ஆண் ஆகியோா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் நிலவரப்படி 741 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com