கந்தர்வகோட்டையில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டதிருத்த மசோதாக்களை திரும்ப பெற வழியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கந்தர்வகோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை ரத்து செய்ய கோரி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் எம். ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிகக்குழு உறுப்பினர் ந. ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன், என். ஜானகிராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் காலந்துகொண்டனர்.