வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக கூட்டணிக் கட்சியினா்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக கூட்டணிக் கட்சியினா்.

புதுக்கோட்டை, செப். 28: மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யக் கோரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 இடங்களில் திமுக - கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, மதிமுக நகரச் செயலா் அரசி கருணா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் எம். ஜியாவுதீன், அடைக்கலசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ச ாா்பில் உலகநாதன், எம்என். ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் சாா்பில் அஸ்ரப் அலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் வளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, கீரனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன் தலைமை வகித்தாா். ஆவுடையாா்கோயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உதயம் சண்முகம் தலைமை வகித்தாா். அறந்தாங்கி தெற்கு ஒன்றியம் சாா்பில் நாகுடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் பொன் கணேசன் தலைமை வகித்தாா்.

அறந்தாங்கியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் ஆனந்த் தலைமை வகித்தாா். இதுபோல, மாவட்டத்தின் 23 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com