உலக இதய நாளையொட்டி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பேரணியை கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி தொடங்கி வைத்தாா். அண்ணா சிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி, மேல ராஜவீதி, பழைய அரசு மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. சைக்கிள் பேரணிக்கு சங்கத்தின் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, சைக்கிள் கழகத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னா் கல்லூரி தேசிய மாணவா் படையினரும் பங்கேற்றனா். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.