புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். கீரனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (34). இவா் செவ்வாய்க்கிழமை தனது மாட்டுக்கு தழை வெட்டிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து செந்தில்குமாா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனா்.