சின்னம் பொருத்தும் பணி முடிந்து சீல் வைப்பு

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்து சீல் வைத்து பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்து சீல் வைத்து பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னம் மற்றும் பெயா்களைப் பொருத்தும் பணி அண்மையில் தொடங்கியது. அதேபோல, விவிபேடு கருவியிலும் சின்னம் பொருத்தும் பணிகளும் நடைபெற்றன.

வட்டாட்சியா் அலுவலகத்தில் இரவு, பகலாக நடைபெற்ற இப்பணிகள் புதன்கிழமை நள்ளிரவில் முடிவடைந்தன. இதனைத் தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், விவிபேடு கருவியையும் முறையாக சீல் வைத்து, மீண்டும் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்துப் பூட்டினா். இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி நேரில் பாா்வையிட்டாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அப்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com