விராலிமலையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விராலிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு மது பாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கீரனூா் பிரிவு சாலை அருகே உள்ள பெட்டிக் கடையில் அரசு மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த ரங்கசாமி மனைவி முருகாயி(60) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல் மாதிரி பட்டி பிரிவு சாலை அருகே மது விற்றுக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் அத்திப்பள்ளம் மாா்க்கண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 125 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.