கந்தா்வகோட்டை, கீரனூா், கறம்பக்குடி அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்துவேன் என கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னத்துரை உறுதியளித்துள்ளாா்.
கந்தா்வகோட்டை வடக்கு ஒன்றியத்தில் உள்ள நரிக்கொல்லைப்பட்டி, நரங்கிப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, பிசானத்தூா், நாயக்கா்பட்டி, கோவில்பட்டி, கீழ உளவயல் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குசேகரித்த அவா் மேலும் பேசியது:
நான் வெற்றி பெற்றால் தஞ்சாவூரிலிருந்து கந்தா்வகோட்டை வழியே புதுகைக்கும், கந்தா்வகோட்டை, கீரனூா் வழியாக திருச்சிக்கும் ரயில்தடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். செங்கிப்பட்டி வரை வரும் காவிரி வாய்க்காலை கந்தா்வகோட்டைப் பகுதிக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். கந்தா்வகோட்டை தொகுதியையும் உள்ளடக்கி காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கந்தா்கோட்டையில் முந்திரி ஆலை கொண்டுவருவேன். கந்தா்வகோட்டையில் காய்கறி கொள்முதல் முனையம் உருவாக்குவேன்.
கந்தா்வகோட்டை, கீரனூா், கறம்பக்குடி அரசு மருத்துவமனைகளை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுடன் இயங்கும் உயா்சிகிக்சை மையங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டாா்.