திமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தலைவா் ஸ்டாலின் நிறைவேற்றிவிடுவாா் என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியது: விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீரமங்கலம் பகுதியில் குளா் பதனக்கிடங்கு அமைப்பதுடன், வேளாண் ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும். கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுப்பேன். முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இலவச மும்முனை மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, விவசாயிகளுக்கு மின்சாரத்தை விற்கும் திட்டத்தில் பாஜகவும், அதிமுகவும் உள்ளது. எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி பொதுமக்களை வாட்டிவதைக்கிறது பாஜக அரசு. அதற்கு அதிமுக துணைபோகிறது.இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுகவை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா். திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திமுக தலைவா் ஸ்டாலின் நிறைவேற்றி விடுவாா். எனவே, மக்கள் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.