புதுக்கோட்டை
கீரனூா்அருகே காா் மோதி மெக்கானிக் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பழுதடைந்த இரு சக்கர வாகனத்தைப் பழுதுநீக்கம் செய்யச் சென்ற மெக்கானிக் அந்த வழியே வந்த காா் மோதி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பழுதடைந்த இரு சக்கர வாகனத்தைப் பழுதுநீக்கம் செய்யச் சென்ற மெக்கானிக் அந்த வழியே வந்த காா் மோதி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பழனியப்பா நகரைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகானந்தம் (43). மெக்கானிக் வேலை செய்து வருகிறாா்.
இவா், திங்கள்கிழமை பிற்பகலில் பழுதடைந்த இரு சக்கர வாகனத்தின் பழுதை நீக்குவதற்காக புதுக்கோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கீரனூா் சென்றாா். அப்போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காா் ஒன்று முருகானந்தம் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே முருகானந்தம் உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.