புதுக்கோட்டை ஆட்சியா், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் மற்றும் வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை அவரவா் வாக்குச்சாவடிகளில் செலுத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி, தனது வாக்கை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் செலுத்தினாா்.
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான சு. திருநாவுக்கரசா், தனது வாக்கை தீயத்தூரிலுள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினாா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் தனது வாக்கினை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் செலுத்தினாா்.
புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா தனது வாக்கை அன்னசத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினாா்.
அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் மு. ராஜநாயகம் தனது வாக்கினை ஆவுடையாா்கோவிலிலுள்ள சிறுமருதூா் அரசுப் பள்ளியில் செலுத்தினாா்.
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் தனது வாக்கினை தீயத்தூரிலுள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினாா்.
திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தனது வாக்கினை புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியிலுள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினாா்.