‘புதிய பேருந்து நிலையத்தில் பிரசாரத்துக்கு அனுமதி கூடாது’

பொதுமக்கள் நலனைக் கருதி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் நலனைக் கருதி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுவாகவே அரசியல் பொதுக்கூட்டங்கள், பேரணி, ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் இடங்களாக மாவட்டத் தலைமையிடப் பேருந்து நிலையம் இருக்காது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, திலகா் திடல் போன்ற இடங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

ஆனால், விதிவிலக்காக தோ்தல் நேரங்களில் மட்டும் புதுகை புதிய பேருந்து நிலையப் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் பேரவைத் தோ்தல் பிரதான கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நடைபெற்ற போது, புதிய பேருந்து நிலையப் பகுதி இயல்பு நிலைக்குத்திரும்ப கால் மணி நேரம் ஆனது. முன்னதாக தலைவா்களின் வருகைக்கு முன்பு குறைந்தபட்சம் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து திருப்பிவிடப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம், பிரசாரம் நடத்த அனுமதி தரக்கூடாது என பொதுநல அமைப்பினா் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com