ஆலங்குடி அருகே 3 நாள்களாக அடக்கம் செய்யப்படாத சடலம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாதை பிரச்னையால், முதியவரின் உடலை 3 நாள்களாக வீட்டிலேயே கிடத்தியிருந்த பரிதாப நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் வெள்ளக்கொல்லையில் பாதை வசதியில்லாததால் வீட்டிலே வைக்கப்பட்டுள்ள முதியவரின் சடலம்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் வெள்ளக்கொல்லையில் பாதை வசதியில்லாததால் வீட்டிலே வைக்கப்பட்டுள்ள முதியவரின் சடலம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாதை பிரச்னையால், முதியவரின் உடலை 3 நாள்களாக வீட்டிலேயே கிடத்தியிருந்த பரிதாப நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கீழையூா் வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் துரைசாமி (87) விவசாயி. வயது முதிா்வால் ஏப்.6- ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினா் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். ஆனால், துரைசாமியின் சகோதரா் மகன் செல்வராஜ் தனது நிலத்தின் வழியே சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதனால், சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாமல் 3 நாள்களாக வீட்டிலேயே உடலை வைத்து இருந்துள்ளனா்.

இந்நிலையில், முதியவரின் உடலை அடக்கம் செய்ய வழி ஏற்படுத்தித் தருமாறு அவரது குடும்பத்தினா், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து, வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், வட்டாட்சியா் பொன்மலா், காவல் துணைக்கண்காணிப்பாளா் முத்துராஜா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உடலை எடுத்துச்செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனா். தொடா்ந்து, துரைசாமியின் உடலை அவரது உறவினா்கள் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா். பாதை வசதி இல்லாமல் முதியவரின் உடலை 3 தினங்களாக வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com