தொற்று பரவல் அதிகரிப்பு: ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்து

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்படுவதாக ஊா்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்படுவதாக ஊா்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலவயல் வேட்டைக்காரன் கோயில் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நாத்துக்கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி பெற மதுரை உயா்நீதிமன்றத்தில் மனு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்த ஊா்க்கூட்டம் பெரி.அழகப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கரோனா பரவல் காரணமாக மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com