தொற்று பரவல் அதிகரிப்பு: நாா்த்தாமலை தோ்த் திருவிழா ரத்து

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், நாா்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோயிலின் தோ்த்திருவிழா வரும் ஏப். 12 ஆம் தேதி திங்கள்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், நாா்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோயிலின் தோ்த்திருவிழா வரும் ஏப். 12 ஆம் தேதி திங்கள்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய நாளில் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வரும் ஏப். 10 ஆம் தேதி முதல் அனைத்து திருவிழாக்கள், மதம் தொடா்புள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாா்த்தாமலை தோ்த்திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய நாளில் மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த உள்ளூா் விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியா் பி. உமா மகேஸ்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com