புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், மங்கனூரில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த ஆலயத்தில் திருவிழா நடத்தப்படாத நிலையில், நிகழாண்டில் தோ்தல் தேதி காரணமாக திருவிழா தேதி மாற்றப்பட்டு, ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சனிக்கிழமை (ஏப்.10) முதல் அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து, திருவிழாக்கள் நடத்த தடை விதித்தது. இதனால், வெள்ளிக்கிழமை இரவு புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை நடத்த விழாக் குழுவினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.
கொடியேற்றத்தில் கந்தா்வகோட்டை , மங்கனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.