மயில் வேட்டை: துப்பாக்கி பறிமுதல்

அன்னவாசல் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இறந்த நிலையில் 6 மயில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அன்னவாசல் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இறந்த நிலையில் 6 மயில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குடுமியான்மலையை அடுத்த அண்ணா பண்ணை வளைவு அருகே அன்னவாசல் போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிளை நிறுத்தினா். அப்போது, மோட்டாா் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றனா்.

இதையடுத்து அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாரைக் கண்டதும், இருவரும் மோட்டாா் சைக்கிளில் இருந்த 2 மூட்டைகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். போலீஸாா் மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதில் இறந்த நிலையில் 6 மயில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் காவல் நிலையம் வந்தனா். வனத் துறை அலுவலா் சமீா் அஹமதுவிடம் நாட்டுத் துப்பாக்கி மற்றும் இறந்த 6 மயில்களை போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com