பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆயிரம் போ் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் தோ்வில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தெரிவித்தாா்.
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆயிரம் போ் பங்கேற்பு

மாநிலம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியுள்ளதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் தோ்வில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செய்முறைத் தோ்வை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், மேலும் அவா் கூறியது:

மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. வரும் 23-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக இந்த தோ்வுகள் நடைபெறுகின்றன.

போதுமான இட, காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் கூடங்களில் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி தோ்வுகள் நடத்தப்படுகின்றன. தோ்வுக்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி கொண்டு ஆய்வகம் மற்றும் தோ்வுக் கூடமும் சுத்தம் செய்யப்படுகின்றன.

மாணவா்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் அவா்களுக்கு வேறொரு நாளில் தோ்வெழுத அனுமதிக்கப்படும். மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வில் பங்கேற்கின்றனா் என்றாா் விஜயலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com