புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 25 மற்றும் மே 1 தேதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் ஏப். 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாவீா் ஜயந்தி மற்றும் மே 1 மே தினம் ஆகிய நாட்களையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், உணவுக் கூடங்களில் உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.