பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் 2 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். தொற்று மேலும் பரவாமல் இருக்க ஊராட்சித்தலைவா் சந்திராசக்திவேல் தலைமையில் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.வெங்கடேசன், ரவி, மருத்துவா் அருண் ஆகியோா் கரோனா தடுப்பு முறைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக தண்டோரா மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.