இரவுநேரப் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குவதால், புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் பேருந்துகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பேருந்துப் போக்குவரத்து இயக்கப்படும். இதனால், புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் நகரப் பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து இரவு 8.30 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து மாலை 5.30 மணி வரையிலும், பொன்னமராவதியிலிருந்து 7.30 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.
புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு இரவு 7 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு 5.20 மணி வரையிலும், பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு இரவு 5.50 மணி வரையிலும் இயக்கப்படும்.
புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு இரவு 8.45 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து காரைக்குடிக்கு 7.30 மணி வரையிலும் இயக்கப்படும்.
பொன்னமராவதியிலிருந்து புதுக்கோட்டைக்கு இரவு 8.40 மணி வரையிலும், அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு 8.45 மணி வரையிலும் இயக்கப்படும். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு இரவு 7.15 மணி வரையிலும் இயக்கப்படும்.
பொதுமக்கள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசின் இந்த பொது முடக்கத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.