போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச பொதுச்செயலா் வேலுசாமி தலைமை வகித்தாா். தொழிற்சங்கத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், முகமதலிஜின்னா, ஸ்ரீதா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை தொமுச கிளை செயலா் சி.முத்தையா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஏஏஎல்எப், உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com